உங்கள் குழந்தைக்கு இரண்டு வயதாகிறதா..! நீங்கள் தர வேண்டிய உணவு வகைகள் இவைதான் !

Written by Aastha Sirohi linkedin_iconfacebook_iconinsta_icon Experience: 3 years
Last Updated on

குழந்தையின் வளர்ச்சியில் முதல் ஐந்து வருடங்கள் என்பது மிக முக்கியமான கால கட்டம். இந்த வயதில் நீங்கள் தரும் ஊட்டச்சத்தான உணவுகள்தான் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடிகோலுகிறது.

குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே அதன் உணவாக இருக்க வேண்டும். குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்றாலும் கூட தாய்ப்பால் தான் அதற்கு சிறந்த உணவாகும். அதன் பின்னர் சிறிது சிறிதாக திட உணவிற்கு பழக்க வேண்டும்.

இரண்டு வயது எனும்போது உங்கள் குழந்தைக்கு பற்கள் முளைத்திருக்கும். சாப்பிட வைப்பதற்குள் உங்களுக்குப் போதும் போதும்  என்றாகி விடும். ஏனென்றால் பொறுமை இல்லாமல் குழந்தைகள் விளையாட ஆரம்பிப்பார்கள்.

உங்கள் குழந்தைக்கு இரண்டு வயது என்றால் இனிமேல் உங்கள் குழந்தைகள் பெரியவர்களாக வளர்கிறார்கள் என்று அர்த்தம். எனவே பெரியவர்கள் போன்றே அவர்களுக்கும் ஊட்டச்சத்துள்ள திட உணவை நீங்கள் வழங்க வேண்டும். அவற்றை பார்க்கலாம்.

2 வயது குழந்தைக்கு தர வேண்டிய உணவு

காய்கறி சூப்

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை காய்கறிகள் வேக வைத்த சூப் கொடுக்கலாம். காலை மாலை இரு நேரமும் தருவதால் அவர்களுக்கு அவசியமான ஊட்டசத்துக்கள் கிடைத்து விடுகிறது. எனவே குழந்தைக்கான சரியான ஊட்டச்சத்து கொடுத்தோமா எனும் மிகப்பெரிய கவலைகளை நீங்கள் காய்கறி  சூப் தருவதன் மூலம் மறந்து விடலாம்.

பருப்பு உணவுகள்

இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் சேர்ப்பது அவர்களுக்கு புரதத்தின் அளவை சரியாக வைத்திருக்கும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிபருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

ஆரோக்கியமான எண்ணெய்கள்

ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயாபீன்ஸ் மற்றும் பிற நட்ஸ் வகைகள்  மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை நியாயமான அளவு EFA களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

பால் பொருட்கள்

பால் பொருள்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், கால்சியம் உட்கொள்ளும் இடைவெளியை ஈடுசெய்ய அவர் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

கேரட்

கேரட் வைட்டமின் ஏ நிறைந்தது.  வைட்டமின் ஏ அதிகமாக பிரபலமானது கீரை, காலே மற்றும் பிற காய்கறிகளிலும் போன்ற உணவுகளில் உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பது அவசியம். வைட்டமின் ஏ எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

கோழி

கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் நல்ல அளவு எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது.  இரத்த சோகையைத் தடுக்கிறது. சைவ உணவில் காணப்படும் இரும்பு சத்து உடலால் உறிஞ்சப்படுவது கடினம், எனவே தேவையான அளவு பெற உங்கள் குழந்தை குறைந்தது அசைவ உணவு உண்ணும் குழந்தைகளை விட இரண்டு மடங்கு அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

மீன்

அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் (EFA கள்) மீன் ஒரு நல்ல மூலமாகும். EFA கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன மற்றும் இருதய அமைப்பை பலப்படுத்துகின்றன. சைவ உணவு உண்பவர்களுக்கு EFA ஆதாரங்களை முறையான மாற்று வேண்டும், ஏனெனில் EFA உடலில் உற்பத்தி செய்யப்படுவதில்லை மற்றும் வெளிப்புறமாக மட்டுமே பெற முடியும்.

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின் சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின் சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். வைட்டமின் சி ஈறுகள் மற்றும் இரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் உதவுகிறது. குவாஷ், மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின் உள்ளது

வாழைப்பழங்கள்

மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள் எனலாம். தசை வலிமை ஆகியவை வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து அதை பிரதான  உணவாக மாற்றவும்.

வைட்டமின் டி

இது தொழில்நுட்ப ரீதியாக ஒரு உணவு அல்ல என்றாலும், இது உடல் உறிஞ்சும் ஒன்று, எனவே வளர்ச்சியில் அது வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கைக் கருத்தில் கொண்டு இதை இந்த பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளோம். சூரிய ஒளியில் இருந்து நாம் பெறும் உறுப்பு வைட்டமின் டி ஆகும். ஒரு குழந்தை தனது அதிகபட்ச வளர்ச்சி திறனை அடைய வைட்டமின் டி அவசியம். வைட்டமின் டி கொண்ட உணவுகள் மீன் மற்றும் பால் பொருட்கள்.

2 வயது குழந்தைக்கான உணவு பட்டியல்

நாள்காலை உணவுஇடை உணவு மதிய உணவுமாலை உணவு இரவு உணவு 
ஞாயிற்றுக்கிழமைகாய்கறிகள் / முளைகள் / வேர்க்கடலை மற்றும் பால் / தயிர்  / உப்மா/ அவல்பால் ஒரு கப்ஏதாவது ஒரு பருப்பு வகைகள் அல்லது அரிசி மற்றும் தாஹி பன்னீர் கொண்டு தயாரிக்கப்படும் கறி வகைகள்பாலுடன் பன்னீர் கட்லெட்ரொட்டி உடன் உருளை பட்டாணி கலவை
திங்கட்கிழமைதோசை , பாசிப்பருப்பு மற்றும் காய்கறிகள் இணைந்த சாம்பார் மற்றும் தயிர்பருவத்திற்கேற்ற பழங்கள்காய்கறி சப்ஜி உடன் சப்பாத்திபழ மில்க் ஷேக்சோயா துகள்களுடன் வறுத்த சப்பாத்தி
செவ்வாய் கிழமைமுட்டை சாதம் அல்லது முட்டை கலந்த ரொட்டி ரோல்காய்கறி சூப்வெள்ளரி குச்சிகளைக் கொண்ட வெஜ் பிரியாணிவேகவைத்த சோளம் அல்லது வேகவைத்த வேர்க்கடலைதயிர் கொண்ட காய்கறி கிச்சடி
புதன்கிழமைஇட்லி மற்றும் சாம்பார்பாதாம் அல்லது உலர் திராட்சைதயிருடன் உருளை கிழங்கு சேர்த்த பரோட்டாபழங்கள்சாதத்துடன் வேக வைத்த கோழிக்கறி
வியாழக்கிழமைநறுக்கிய உலர் பழக் கொட்டைகளுடன் ராகி கஞ்சிபழங்கள்சுண்டல்கடலையுடன் கிச்சடி மற்றும் தயிர்பால் ஒரு கப் அல்லது காய்கறி சூப்அசைவ/ சைவ கட்லெட் வகைகள் உடன் பால்
வெள்ளிக்கிழமைபாலில் சமைத்த ஓட்ஸ்மிருதுவாக்கிய பழம் அல்லது கஸ்டர்ட்சப்பாத்திகளுடன் சுண்டல் கறிஓட்ஸ் கிச்சடிசாம்பார் சாதம்
சனிக்கிழமைகாய்கறி பராந்தாபாசிப்பருப்புடன் காய்கறி சூப்பன்னீர் புலாவ்ஆம்லெட் அல்லது சீஸ்-சப்பாத்தி ரோல்தயிருடன் காய்கறி புலாவ்

2 வயது குழந்தைக்கு வீட்டில் தயாரிக்க வேண்டிய உணவு வகைகள்

1. பன்னீர் கட்லெட்

  • 200 கிராம் பன்னீா்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 வெங்காயம்
  • 1 பச்சை மிளகாய்
  •  கறிவேப்பிலை
  • ½ மேஜைக்கரண்டி பூண்டு
  • ½ மேஜைக்கரண்டி இஞ்சி
  • 1/2தேக்கரண்டி சோம்பு தூள்
  • 1/4 மேஜைக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/2 தேக்கரண்டி நல்ல மிளகு தூள்
  • 1 உருளைக்கிழங்கு
பொரிக்க தேவையான பொருட்கள்:
  • 2 மேஜைக்கரண்டி சோள மாவு
  • உப்பு தேவையான அளவு
  • ½ கப் பிரட் தூள்
  • எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

ஒரு குக்கரில் உருளை கிழங்கு மற்றும்  நீர் சேர்த்து வேக வைக்கவும்.2 விசில் வரும் வரை வைக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு கலவையை சேர்க்கவும் அவை நன்கு வதங்கியதும் சோம்பு, கரம் மசாலா மற்றும் நல்ல மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பின்னர் பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதனை வெங்காயக் கலவையுடன் சேர்த்து நன்றாக கிளறவும். அதனை 5 நிமிடம் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதனை ஆற வைக்கவும்.

உருளைகிழங்கை மசித்துக் கொள்ளவும். சமைத்த பன்னீர் கலவையை உருளைகிழங்குடன் சேர்த்து நன்கு பிசையவும்.

அதனை சிறு சிறு பகுதிகளாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, தட்டையாக கட்லெட் வடிவத்தில் செய்து கொள்ளவும். பின்பு சோள மாவுடன் நீர் சேர்த்து கலவை தயாரித்து கொள்ளவும்.

கட்லெட்களை சோள மாவுக் கலவையில் முக்கி பின்பு பிரட் தூளில் போட்டு எடுத்து அதனை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். சுவையான பன்னீர் கட்லெட் தயார்.

குழந்தைகளின் சிறப்பான ஆரோக்கியத்திற்கு கட்லெட்களை தோசை கல்லில் போட்டு பிரட்டி வேக வைத்துக் கொடுக்கலாம்.

2. சோயா பீன்ஸ் வறுவல்

  • சோயா 1 கப்
  • 1வெங்காயம்
  • 1தக்காளி
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  • சீரகத்தூள் 1 ஸ்பூன்
  • கரம் மசாலா தூள் 1/4 ஸ்பூன்
  • வர மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  • மல்லி இலை சிறிதளவு
  • கடுகு 1/2 ஸ்பூன்
  • சீரகம் 1/2 ஸ்பூன்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
செய்முறை

தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு அதில் சோயாவை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும். ஆறிய பிறகு பிழிந்து வைக்கவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சீரகம் இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு வதக்கிய வெங்காயத்துடன் மசாலா உப்பு சேர்த்து அதில் தக்காளி போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பிறகு சோயாவை சேர்த்து 20 நிமிடம் அப்படியே வதக்கி மல்லித் தழை தூவி இறக்கவும்.

3. பாசிப்பருப்பு புட்டு

  • வறுத்த பாசிப்பருப்பு – ஒரு கப்
  • பொடித்த வெல்லம் – முக்கால் கப்
  • நெய் – இரண்டு அல்லது மூன்று டேபிள்ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு – 15
  • ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
  • தேங்காய்த் துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

ஒரு பாத்திரத்தில் வறுத்த பாசிப்பருப்பை போட்டு தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். ஒரு மணி நேரம் நன்றாக ஊறியதும் தண்ணீரை வடித்துவிட்டு கொரகொரப்பாக அரைக்கவும். அதனுடன் மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து இட்லித் தட்டில் வைத்து ஆவியில் 10 முதல் 12 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்து வைக்கவும்.

அடி கனமான ஒரு கடாயில் வெல்லத்தூளைப் போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து வெல்லக்கரைசலை வடிகட்டி, மீண்டும் வாணலியில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

ஒரு கம்பி பாகு பதம் வந்தவுடன் உதிர்த்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவை சேர்த்துக் கிளறவும். மாவு, பாகோடு சேர்ந்து, நன்றாகக் கெட்டியானவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும். இதனுடன் நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை இதனுடன்  கலக்கவும்.

4. சாம்பார் சாதம்

தேவையானப்பொருட்கள்
  • அரிசி – 1 கப்
  • துவரம் பருப்பு – 1/2 கப்
  • புளி – ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு
  • சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
  • சாம்பார் வெங்காயம் – 15
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 1
  • கலந்த காய்கள் – 3 கப்
  • (முருங்கைக்காய், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கு).
வறுத்து அரைக்க
  • காய்ந்த மிளகாய் –  3
  • தனியா – 1 டேபிள்ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
  • பெருங்காயம் – ஒரு பட்டாணி அளவு
  • தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க
  • நல்லெண்ணெய்  – 2 டீஸ்பூன்
  • நெய் – 2 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 2
  • கறிவேப்பிலை – சிறிது
  • கொத்தமல்லி தழை – சிறிது
செய்முறை

அரிசியையும், பருப்பையும் கழுவி அத்துடன் 3 முதல் 4 கப் தண்ணீரைச் சேர்த்து, குக்கரில் போட்டு 5 முதல் 6 விசில் வரும்  வரை வேக வைக்க வேண்டும்.

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் வறுத்து அரைக்க கொடுத்த பொருள்களை ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். வறுத்தப் பொருட்களை ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு நன்றாகப்  பொடித்துக் கொள்ளவும். புளியை சிறிது நீரில் ஊறவைத்து, கரைத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் அல்லது வாணலியில் 2 ஸ்பூன் எண்ணை விட்டு சாம்பார் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பின்  அதில் பச்சை மிளகாயைக் கீறி வதக்கவும். பச்சை மிளகாய், வெங்காயம் இரண்டும் வாசனை வர வதங்கியவுடன், நறுக்கி வைத்துள்ள  காய்களைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப்  போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்குத் தேவையானத் தண்ணீரைச் சேர்க்கவும்.

காய்கள் வெந்ததும், புளித்தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். அதில் வேகவைத்துள்ள சாதம் போட்டு நன்றாக மசித்து விட்டு, அத்துடன் பொடித்து வைத்துள்ளப் பொடி, பொடியாக நறுக்கிய  கொத்துமல்லி தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

தாளிக்கும் வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை  சேர்த்துத் தாளித்து சாதத்தில் கொட்டிக் கிளறி இறக்கவும்.

Is your child two years old ..! These are the types of food you should give!
Image: Shutterstock

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Aastha Sirohi
Aastha SirohiBeauty & Lifestyle Writer
Aastha Sirohi is a beauty and lifestyle content writer with over three years of experience in writing for different genres. She has a master’s degree in English Literature from The English And Foreign Languages University and a bachelor’s degree in education from the University of Mysore.

Read full bio of Aastha Sirohi
Latest Articles